We will fetch book names as per the search key...
| Seller | Price | |
|---|---|---|
| StoryMirror Best price | ₹99 | |
| Amazon | Price not available | |
| Flipkart | Price not available |
சுயம் – ஒரு தேடலின் தொடக்கம் :
“ தன் சுயத்தில் புற விஷயங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுகளே இந்த சிந்தனை மலர்கள் . சுயம் , காதல் , கடவுள் ,சமூகம், இறை, இயற்கை ,இல்லறம்,பிரபஞ்சம் , மனம், உடல், உயிர், மனிதம், இருள் , ஒளி, இளமை , முதுமை, பெண்மை , ஆயுதம், போர் , மரணம் , வறுமை , நாகரீகம் , வாழ்க்கை , தவம் , தன்னம்பிக்கை , சிந்தனை , தத்துவம் இதன் ஒட்டுமொத்த சங்கமம் தான் இந்நூல்.” – நூலாசிரியர்.
---
“கருத்துக்கள் நிறைந்த இக்கவிதைத் தொகுப்பு கரையை விட்டு கடலுக்குள் இறங்கி இருக்கிறது கடலில் தத்தளிப்போரை கரை சேர்க்க ...
முதிர்ந்த தத்துவங்களும், சமுதாயம் முதிர்வதற்கான உபாயங்களும் இக்கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே நயமாகவும் திறமையாகவும் கையாளப்பட்டிருக்கின்றன.
அவைகளைப் படித்து , படித்த கையோடு மடித்து இதயத்தோடு வைத்து இன்று மட்டுமில்லாமல் என்றென்றும் அவைகளை தனது வாழ்க்கையின் பாதையாக அமைத்து இச்சமுதாயம் பயன்பெறுமாக ..
- முனைவர்.கோ.அழகர் ராமானுஜம் ,நிறுவனர்,வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமம் , பேரளம்.
“ தனி மனித அவலங்களையும் , வாழ்க்கையின் புதிர்களையும் , நாகரீக வாழ்க்கை செல்லும் பாதையினையும் , மனிதகுலத் தேவைகளையும் , பெண்ணின் பெருமையினையும் ஒன்று சேர விருந்தாகவும் மருந்தாகவும் அமைகின்றது இந்நூல் “ – அருள்நிதி.G.N.மகாலிங்கம் , வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் நோய் தீர்க்கும் மையம் , மேல் ஹோசஹட்டி, நீலகிரி.
நூலாசிரியர் குறிப்பு :
நூலாசிரியர் மனோஹரன் கேசவன், (புனைப்பெயர் : யோகி ) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சார்ந்தவர்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மாணாக்கர்.முதுநிலை யோகா பயின்றவர்.
யோகா,தியானம், தத்துவம்,உடல்நலம், மனவளம்,வர்மா,ஹீலிங், கை தொடு சிகிட்சை, அக்குபஞ்சர், மூலிகை மருத்துவம் முதலியவற்றின் மூலமாக சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை ஆற்றி வருபவர்.
தற்பொழுது ரிலையன்ஸ் கம்பனியில் பணியாற்றி வருபவர்.
இவரின் முதல் கவிதை நூல் “ சுயம் – ஒரு தேடலின் தொடக்கம் “ 2013-ம் ஆண்டில் வெளிவந்தது .
இவரின் இரண்டாம் கவிதை நூல் “ உள் ஒளி – உண்மை உணர்வுக்கும் உன்னத வாழ்க்கைக்கும் “ 2016-ம் ஆண்டில் வெளிவந்தது .
இவ்விரண்டு நூல்களும் வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமத்தின் நிறுவனரும் பேராசிரியருமான திரு.அழகர் ராமானுஜம் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது இந்நூல்களுக்கு மணிமகுடமாய் அமைந்தது.
மின்னூலாக வெளிவரும் இந்நூல் இவ்விரண்டு கவிதை நூல்களின் தொகுப்பாக வெளிவருகிறது .